தலைதூக்கும் குடும்ப அரசியல்! பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதி அரசியல் வாரிசான ஆகாஷ் ஆனந்த்! யார் இவர்?
லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதி உள்ளார். இந்நிலையில் தான் தனக்கு பிறகு கட்சியை தனது மருமகன் ஆகாஷ் ஆனந்த் தலைவராக கட்சியை வழிநடத்துவார் என இன்று அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மாயாவதி. இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ளார். மாயாவதி திருமணம் செய்து கொள்ளவில்லை.

தற்போது அவருக்கு 67 வயது ஆகிறது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு உத்தர பிரதேசம் தவிர ராஜஸ்தான் உள்பட பிற மாநிலங்களிலும் எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்நிலையில் தான் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாயாவதி தனது அரசியல் வாரிசை அறிவித்தார். அதாவது தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை அறிவித்தார். இவர் தான் தனக்கு பிறகு பகுஜன் சமாஜ் கட்சியை வழிநடத்துவார் எனவும் தெரிவித்தார் என தெரிவித்தார். ஆகாஷ் ஆனந்த் என்பவர் மாயாவதியின் தம்பி ஆனந்த் குமாரின் மகன் ஆவார்.
கடந்த ஆண்டு முதலே ஆகாஷ் ஆனந்த் தான் பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த தலைவர் என்ற பேச்சு அடிப்பட்டு வந்த நிலையில் இன்று உறுதியாகி உள்ளது. தற்போது ஆகாஷ் ஆனந்த்துக்கு 31 வயது ஆகிறது. இவர் கடந்த 2016ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். அதன்பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக இடம்பிடித்தார்.
மேலும் கடந்த 2022ம் ஆண்டு ராஜஸ்தான் அல்வாரில் அம்பேத்கரின் பிறந்தநாளில் 13 கிலோமீட்டர் தூரத்துக்கு பாதயாத்திரை நடத்தினார். இது கட்சிக்கு உத்வேகம் அளித்தது. இதற்கிடையே தான் ஆகாஷ் ஆனந்த் பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த தலைவராக மாயாவதி அறிவித்துள்ள நிலையில் அவரது கட்சியிலும் குடும்ப அரசியல் தலைதூக்குகியுள்ளதாக எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்துள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications