தேர்தல் 'அடி'யால் கோபம்... கட்சிக் கமிட்டிகளைக் கலைத்தார் மாயாவதி
லக்னொ: லோக்சபா தேர்தலில் பெற்ற படுதோல்வியால் வெறுத்துப்போயுள்ள பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி தனது கட்சியின் அனைத்து கமிட்டிகளையும் கலைத்துவிட்டார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் 80 தொகுதிகளில் ஒன்றில் கூட அம்மாநில முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் கட்சியின் மாவட்ட மற்றும் மாநில அளவிலான அனைத்து கமிட்டிகளையும் மாயாவதி இன்று கலைத்து உத்தரவிட்டார். உள்ளூர் நிலவரத்தை ஆய்வு செய்து மீண்டும் கமிட்டிகள் உருவாக்கப்படும் என்று தெரிகிறது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்கள். மக்களின் மன நிலையை பற்றி மாயாவதியிடம் எடுத்துரைக்காமல், மக்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாக உள்ளதாக அவர்கள் நம்பிக்கை கொடுத்துவந்துள்ளனர். இதற்காகத்தான் ஒருங்கிணைப்பாளர்களும் நீக்கப்பட்டுள்ளனர். மாயாவதி முதல்வராக இருந்தபோது 2010ம் ஆண்டில் ஒருமுறை இதுபோல கட்சியின் அனைத்து கமிட்டிகளையும் கலைத்தார். ஆனால் சட்ட சபை தேர்தலில் தோல்வியைத்தான் அடைந்தார்.
இனிமேல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல்களை மனதில் கொண்டுதான், இப்போது கட்சி கமிட்டிகள் கலைக்கப்பட்டுள்ளன என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications