Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முசாபர்நகர் கலவரம்.. உ.பி. அரசை டிஸ்மிஸ் செய்க: ஜனாதிபதியிடம் மாயாவதி மனு

Subscribe to Oneindia Tamil

Mayawati meets Mukherjee, demands President's rule in UP
டெல்லி: முசாபர்நகர் கலவரத்தை தடுக்க தவறிய உத்தரப்பிரதேச மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நேரில் வலியுறுத்தியுள்ளார். முசாபர் நகரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 49 பேர் பலியாகினர். 40 ஆயிரம் பேர் அகதிகளாயினர். இந்த கலவரத்தை தடுக்க உத்தரப்பிரதேச மாநில அரசு தவறிவிட்டது என்பது பகுஜன் சமாஜ் கட்சியின் குற்றச்சாட்டு.

இந்த நிலையில் டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை இன்று நேரில் சந்தித்த மாயாவதி. முசாபர்நகர் கலவரத்தைத் தடுக்க தவறிய அகிலேஷ் யாதவ் அரசை அரசியல் சாசன சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி கலைக்க வேண்டும். அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கோரி மனு அளித்துள்ளார்.

மேலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து மோசமடைந்து வருவதாகக் கூறிய அவர், முசாபர் நகர் கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அப்பாவிகள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதே காரணத்தைக் கூறி உத்தரப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே ஜனாதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தது.

தற்போது பகுஜன் சமாஜ் கட்சியும் அதே கோரிக்கையை வலியுறுத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+