உ.பியில் ஆடு, மாடு வெட்ட தடை விதித்ததன் எதிரொலி... டெல்லியில் இறைச்சி விலை வீர்ர்ர்!!
உத்தரப்பிரதேசத்தில் ஆடு, மாடுகளை வெட்ட அம்மாநில முதல்வர் தடைவிதிதுள்ளதையடுத்து டெல்லியில் இறைச்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் ஆடு, மாடுகளை வெட்ட அம்மாநில முதல்வர் தடைவிதிதுள்ளதையடுத்து டெல்லியில் இறைச்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச முதல்வராக பதவியேற்ற கையோடு யோகி ஆதித்ய நாத் அம்மாநிலத்தில் ஆடு, மாடுகளை வெட்ட தடைவிதித்தார். மேலும் அனுமதி இல்லாமல் செயல்படும் இறைச்சிக் கூடங்களையும் இழுத்து மூட உத்தரவிட்டார்.
இதனைக் கண்டித்து இறைச்சி வியாபாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் இறைச்சி விநியோகம் முடங்கியுள்ளது.

பக்கத்து மாநிலங்களில் இருந்து..
இறைச்சி வியாபாரிகள் போராட்டத்தால் அண்டை மாநிலமான டெல்லிக்கு இறைச்சி வரத்து குறைந்துள்ளது. பெரும்பாலும் டெல்லிக்கு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இருந்துதான் இறைச்சி கொண்டுவரப்படுகிறது.

உ.பியிலிருந்து நிறுத்தம்
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் போராட்டத்தால் டெல்லிக்கு அங்கிருந்து இறைச்சி வருவது நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து வரும் இறைச்சி போதுமான அளவு இல்லாததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கிடுகிடுவென உயர்வு
டெல்லியில் தினமும் 40 ஆயிரம் கிலோ எருமை மாட்டு இறைச்சியும், 80 ஆயிரம் கிலோ ஆட்டு இறைச்சியும் விற்பனை ஆகும். அந்த அளவுக்கு இறைச்சிவரத்து இல்லாததால் இதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ரூ.40 முதல் ரூ 60 வரை உயர்வு
ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ.40-ல் இருந்து ரூ.60 வரை உயர்ந்துள்ளது. ரூ.380-ல் இருந்து ரூ.400 வரை விற்கப்பட்ட ஆட்டு இறைச்சி தற்போது ரூ.500 வரை உயர்ந்து விட்டது. எருமை மாட்டு இறைச்சி ரூ.170-ல் இருந்து ரூ.200 ஆக உயர்ந்து இருக்கிறது.

அசைவ பிரியர்கள் பாதிப்பு
இறைச்சி விலை திடீர் உயர்வால் டெல்லி அசைவ பிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் நடைபெறும் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தால் மட்டுமே டெல்லியில் இறைச்சி விலை குறையும் என தெரிகிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications