டெல்லி தலைமை செயலகத்தில் நுழைய மீடியாக்களுக்கு ஆம் ஆத்மி அரசு தடை!!
டெல்லி: டெல்லி தலைமை செயலகத்தில் நுழைய அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ஆம் ஆத்மி அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.
டெல்லியில் சனிக்கிழமையன்று ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்றது. அப்போது டெல்லி தலைமைச் செயலகத்தில் பொதுமக்கள் எந்த வித சிறப்பு பாஸும் இன்றி எந்த இடத்துக்கும் சென்று வரலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை டெல்லி தலைமை செயலகத்தில் நுழைய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருந்த பத்திரிகையாளர்களும் கூட டெல்லி தலைமை செயலகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இது குறித்து டெல்லியில் இன்று சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அவரோ இது தொடர்பாக தாம் கவனிக்கிறேன் என்று கூறிவிட்டு அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டார்.
இதனிடையே ஆம் ஆத்மி அரசைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் பத்திரிகையாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும் டெல்லி தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications