மீரட் வகுப்பு மோதலில் ஒருவர் பலி- 50 பேர் படுகாயம்
மீரட்: உத்தரப்பிரதேசம் மீரட்டில் இரு வகுப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியானார். மேலும் உயர் போலீஸ் அதிகாரி உள்பட 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் நகரின் தீர் கெக்ரான் என்ற இடத்தில் மசூதி அருகே ஒரு பிரிவினர் தண்ணீர் நிலையம் அமைக்க முன்வந்தனர். இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அங்கியிருந்த வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டனர்.
இதில் ஒருவர் பலியானார். மேலும் உயர் போலீஸ் அதிகாரி, 2 பத்திரிகையாளர்கள் உட்பட 50 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் அங்கு பதற்றமான நிலை நீடித்து வருகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications