மீரட் வகுப்பு மோதலில் ஒருவர் பலி- 50 பேர் படுகாயம்
மீரட்: உத்தரப்பிரதேசம் மீரட்டில் இரு வகுப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியானார். மேலும் உயர் போலீஸ் அதிகாரி உள்பட 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் நகரின் தீர் கெக்ரான் என்ற இடத்தில் மசூதி அருகே ஒரு பிரிவினர் தண்ணீர் நிலையம் அமைக்க முன்வந்தனர். இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அங்கியிருந்த வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டனர்.
இதில் ஒருவர் பலியானார். மேலும் உயர் போலீஸ் அதிகாரி, 2 பத்திரிகையாளர்கள் உட்பட 50 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் அங்கு பதற்றமான நிலை நீடித்து வருகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications