அந்த 15 பேரும் உயிரோட இருக்க வாய்ப்பில்லை.. மேகாலயாவில் கைவிரித்த மீட்பு குழு.. கதறும் குடும்பம்!
மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 15 பேரும் இறந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.
Recommended Video

ஷில்லாங்: மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 15 பேரும் இறந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.
மேகாலயாவின் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீர் என்று சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கடந்த 12ம் தேதி குகைக்குள் இருந்த 15 பேரும் நீரில் சிக்கினார்கள்.
அப்போது சிக்கிய இந்த ஊழியர்களை இன்னும் மீட்க முடியாமல் மீட்பு படையினர் கஷ்டப்பட்டு வருகிறார்கள். 14 நாட்களாக அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

எதுவும் இல்லை
இவர்கள் எங்கே இருக்கிறார்கள். என்ன நிலையில் இருக்கிறார்கள் என்ற விவரம் கூட யாருக்கும் தெரியவில்லை. இவர்கள் கடந்த 14 நாட்களாக உணவு தண்ணீர் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பணி நிறுத்தம்
போதிய உபகரணங்கள் இல்லாததால் தற்போது மீட்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது. அதிக அழுத்தம் கொண்ட பம்புகளை கொண்டு வர வேண்டும் என்று மீட்பு பணி நிறுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த 4 நாட்களாக அங்கு எந்த விதமான மீட்பு பணியும் செய்யபடவில்லை.

சந்தேகம்தான்
மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய அனைவரும் பலியாகி இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகிறது.14 நாட்களாக மீட்புபணி நடந்தும் ஒருவர் கூட மீட்கப்படவில்லை. இதனால் அவர்கள் 15 பேரும் இருந்திருக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்து இருக்கிறார்கள்.

கொடூரம்
இவர்களின் குடும்பம் தற்போது பெரும் பதற்றத்தில் இருக்கிறது. மீட்பு படையினர் கைவிட்டதை அடுத்து இவர்கள் கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு தங்கள் உறவினர்களுக்காக காத்து இருக்கிறார்கள். சுரங்கம் இருக்கும் இடத்திற்கு வெளியே கடவுள் படங்களை வைத்து வழிபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications