35ஏ பிரிவை ரத்து செய்வதா? காஷ்மீர் பற்றி எரியும்... உயிர் மூச்சு உள்ளவரை தடுப்போம்: மெஃபூபா முப்தி
ஸ்ரீநகர்: தங்களது மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 35ஏ பிரிவை மத்திய அரசு நீக்கப் போகிறது என்கிற செய்திகளால் ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.
அரசியல் சாசனத்தின் 370. 35 ஏ பிரிவுகள் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குகிறது. 35 ஏ பிரிவானது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிரந்த குடிமக்கள் யார் என்பதை வரையறை செய்கிறது.
இதனால் பிற மாநிலத்தவர் ஜம்மு காஷ்மீரில் சொத்துகளை வாங்கி குவிக்க முடியாது. இதனால் அந்த தேசிய இனத்தின் தனித்தன்மை பாதுகாக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

35ஏ முட்டுக்கட்டை
ஆனால் பாஜகவோ, 35 ஏ பிரிவானது ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்கிறது. மேலும் இது முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக தொடர்ந்து இருப்பதையும் பாஜக விரும்பவில்லை. இதனால் 35 ஏ பிரிவை நீக்குவதில் தீவிரமாக இருக்கிறது.

ராணுவம் குவிப்பால் பதற்றம்
இந்நிலையில் திடீரென ஜம்மு காஷ்மீரில் 10,000 ராணுவம் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் சதித் திட்டத்தை முறியடிக்கவே ராணுவம் குவிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

காஷ்மீர் பற்றி எரியும்
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறது பாஜக. அரசியல் சாசனத்தின் 35ஏ பிரிவின் மீது கை வைத்தால் ஒட்டுமொத்த காஷ்மீரும் பற்றி எரியும்.

இறுதிவரை போராடுவோம்
எங்கள் உயிர்மூச்சு இருக்கும் வரை ஜம்மு காஷ்மீரத்தின் சிறப்பு அந்தஸ்தை பாதுகாக்க போராடுவோம் என்றார். இதேபோல் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications