கர்நாடக வாழ் தமிழர்கள் தமிழ்நாடு திரும்ப வேண்டி வரும்: வாட்டாள் வெறிப் பேச்சு!
பெங்களூர்: மேகதாது அணையைக் கட்டவிடாமல் தமிழகம் முரண்டு பிடித்தால், கர்நாடகாவிலுள்ள தமிழர்களை, தமிழ்நாடு திரும்ப அழைத்துக் கொள்ளட்டும் என்று கன்னட சளுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துப் பேசியுள்ளார்.
காவிரிக்கு குறுக்கே மேகதாது (மேக்கேதாட்டு-ஆடு தாண்டும் பாறை) பகுதியில் கர்நாடகா புதிய அணை ஒன்றை கட்டி, பெங்களூரு உள்ளிட்ட தென் கர்நாடக பகுதி மக்களுக்கு குடிநீர் அளிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டர் பணிகள் தொடங்கிவிட்டன.

ஆனால், காவிரிக்கு குறுக்கே கர்நாடகம் அணை கட்டினால், தண்ணீரை சேமித்து வைத்துக் கொண்டு, தமிழகத்துக்கு தர வேண்டிய பங்கையும் அளிக்காமல் போக வாய்ப்புள்ளதாக கருதி தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏவும், கன்னட போராட்டக்காரர் மற்றும் கன்னட சளுவளி வாட்டாள் கட்சி தலைவருமான நாகராஜ் பெங்களூர் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது நாகராஜ் கூறியதாவது: மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகம் தலையிடுவது முட்டாள்தனமானது. காவிரியில் தண்ணீர் தராவிட்டால் தலையிடும் உரிமைதான் தமிழகத்துக்கு உள்ளது. கர்நாடகா தனது பங்கிலுள்ள தண்ணீரை சேகரித்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முயலும்போது, அண்டை மாநிலம் தலையிடுவது வெட்கக்கேடு.
பெங்களூர் உட்பட தென் கர்நாடக மாவட்டங்களில் கணிசமாக தமிழர்கள் வசிக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கும் சேர்த்துதான் மேகதாது அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து கொடுக்க உள்ளோம். எனவே, மேகதாது அணை வேண்டாம் என்று கூறும் தமிழகம், கர்நாடகாவிலுள்ள தமிழர்களை அவர்கள் மாநிலத்துக்கே திரும்ப அழைத்துக் கொள்ளட்டும்.
மேலும், காவிரி நீரில் மாசு கலப்பதாக தமிழகம் வழக்கு தொடர்ந்துள்ளது. காவிரி நீரை சுத்தப்படுத்தி தமிழ்நாட்டுக்கு அனுப்ப வேண்டிய வெட்டி வேலை கர்நாடகாவுக்கு கிடையாது. இவ்வாறு வாட்டாள் நாகராஜ் காட்டமாக தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications