For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாரனாசியில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை சீரழித்த ரிக்ஷாக்காரர், ஆட்டோ டிரைவர்

By Siva
Google Oneindia Tamil News

வாரனாசி: உத்தர பிரதேசத்தில் 17 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி இரண்டு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பதாவ்ன் மாவட்டத்தில் சகோதரிகள் இருவர் பலாத்காரம் செய்து மரத்தில் தொங்கவிடப்பட்டதில் உயிர் இழந்தனர். இதையடுத்து ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஆசிட் குடிக்க வைக்கப்பட்டு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டார். மேலும் ஒரு சிறுமி மரத்தில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் போலீசாரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இப்படி அகிலேஷ் யாதவ் ஆளும் மாநிலத்தில் பெண்கள், சிறுமிகள் அடுத்தடுத்து பலாத்காரம் செய்யப்பட்டு வரும் நிலையில் 17 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை 2 பேர் சேர்ந்த சீரழித்துள்ளனர்.

வாரனாசியில் உள்ள மந்துவாதிஹ் ரயில் நிலையம் அருகே 17 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி தண்ணீர் தேடி அலைந்துள்ளார். இதை பார்த்த பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்த ரிக்ஷாக்காரரான சுரேஷ் யாதவ் சிறுமியை அழைத்துக் கொண்டு பரஸ்நாத் பட்டேல் என்பவரின் ஆட்டோவில் ஏறினார்.

முதைலா பகுதிக்கு அழைத்துச் செல்லுமாறு சுரேஷ் பரஸ்நாத்திடம் கூறினார். இந்நிலையில் வழியில் ஒரு தோட்டத்தை பார்த்த சுரேஷும், பரஸ்நாத்தும் சிறுமியை அங்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். சிறுமி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அவர்கள் சிறுமியை அடித்து நொறுக்கி வாயில் துணியை திணித்து பலாத்காரம் செய்தனர்.

இந்நிலையில் தோட்டத்தின் காவலாளியான திலிப் சோனேகர் அவர்களை பார்த்துவிட்டு அங்கு வந்து அந்த இருவரையும் தனது நண்பர்களுடன் சேர்ந்து அடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சுரேஷ் மற்றும் பரஸ்நாத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

English summary
A 17-year old mentally challenged girl was sexually assaulted by two men in Varanasi, UP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X