அரசு பள்ளி விடுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை சீரழித்து கர்ப்பமாக்கிய வாட்ச்மேன், குக்
நாக்பூர்: நாக்பூரில் மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி அரசு நடத்தும் பள்ளியின் விடுதியில் 2 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான அரசு நடத்தும் பள்ளி உள்ளது. அந்த பள்ளி விடுதியில் மொத்தம் 47 மாணவ, மாணவியர் தங்கியுள்ளனர். இந்நிலையில் பள்ளியின் பாதுகாவலர் கிசான் பாவ்னே மற்றும் விடுதியின் சமையல்காரர் பாரத் காம்ப்ளி ஆகியோர் விடுதியில் தங்கியிருக்கும் 17 வயது மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அப்போது அதை புகைப்படம் எடுத்து மாணவியை மிரட்டியுள்ளனர். இந்நிலையில் மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து நடந்த சம்பவம் பற்றி அறிந்த மாணவியின் தந்தை ராணா பிரதாப் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் பாரத் மற்றும் கிசான் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போதிலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட சமூகநல அதிகாரி பி.ஏ. வானி இன்று காலை பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications