Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Breaking News: 2வது முறையாக நிரம்பிய மேட்டூர்.. விநாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீர் திறப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேட்டூர் அணை குறுகிய காலத்தில் 2வது முறையாக நிரம்பியுள்ளது. அணைக்கு அபரிமிதமான தண்ணீர் வரத்து உள்ளதால் 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்திலிருந்து கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் லட்சம் கன அடி நீர் விநாடிக்கு வெளியாகிறது. இந்தத் தண்ணீர் தற்போது மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 80,000 கன அடி நீர் வெளியேறி வருகிறது.

Aug 11, 2018, 7:09 pm IST

கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்குவது பற்றி ஆய்வு செய்ய குழு

மத்திய அரசு குழு அமைத்துள்ளதாக பாஜக எம்.பி இல.கணேசன் தகவல்

Aug 11, 2018, 6:01 pm IST

ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்

கோவை 7வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

Aug 11, 2018, 3:56 pm IST

கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தபோது ராகுல் காந்திக்கு பாதுகாப்பு குறைவு

ராகுல் காந்தியின் பாதுகாப்பு குறைவு குறித்து மத்திய அரசு அதிருப்தி

மத்திய அரசுக்கு உள்துறை அமைச்சகம் அறிக்கை அனுப்பியது

நீண்ட நேரம் போதிய பாதுகாப்பு இல்லாமல் கூட்ட நெரிசலில் சிக்கியிருந்தார் ராகுல் காந்தி

திமுக தொண்டர்களோடு தொண்டராக அவரும் படியேறி வந்த வீடியோ வைரலானது

தமிழக அரசு இதுகுறித்து விளக்கம் அளிக்க ஈவிகேஎஸ் இளங்கோவன் கோரிக்கை

தமிழக அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவும் இளங்கோவன் கோரிக்கை

Aug 11, 2018, 12:58 pm IST

மழை, வெள்ளம் பாதித்த இடங்களில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு

ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார் முதல்வர் பினராயி விஜயன்

எதிர்க்கட்சி தலைவர் சென்னிதலாவுடன் இணைந்து ஆய்வு செய்த முதல்வர்

Aug 11, 2018, 12:51 pm IST

கபினி அணையில் திறந்து விட்ட தண்ணீரால் மைசூர்-ஊட்டி நெடுஞ்சாலைக்குள் புகுந்த வெள்ளம்

மைசூரிலிருந்து, ஊட்டி, கோழிக்கோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சீரானது

Aug 11, 2018, 12:48 pm IST

கபினி அணையில் திறந்து விட்ட தண்ணீரால் மைசூர்-ஊட்டி நெடுஞ்சாலைக்குள் புகுந்த வெள்ளம்

மைசூரிலிருந்து, ஊட்டி, கோழிக்கோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சீரானது

Aug 11, 2018, 12:15 pm IST

மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 90,000 கன அடி நீர் வெளியேறுகிறது

அணையிலிருந்து பெருமளவில் நீர் திறக்கப்படுவதால் வெள்ள அபாயம்

12 மாவட்ட கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

Aug 11, 2018, 12:12 pm IST

மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது

அபரிமிதமான நீர்வரத்தால் குறுகிய காலத்தில் 2வது முறையாக நிரம்பியது

அணையின் உயரம் 120 அடியாகும்

நீர்மட்டம் தற்போது 119.71 ஆக உள்ளது

தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து கிடுகிடு அதிகரிப்பு

Aug 11, 2018, 11:15 am IST

காவிரியிலிருந்து 1.45 லட்சம் கன அடி நீர் திறப்பு

கபினியில் இருந்து 85,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது

கேஆர்எஸ் அணையிலிருந்து 60,000 கன அடி நீர் திறப்பு

Aug 11, 2018, 11:10 am IST

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை-ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்-ராகுல் காந்தி வேண்டுகோள்

Aug 11, 2018, 10:32 am IST

கேரளாவில் 50 ஆண்டுகள் இல்லாத கனமழை

வெள்ளத்தால் சிக்கித்தவிக்கும் கேரளாவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நேரில் ஆய்வு

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+