திப்பு சுல்தான் மன்னில் இருந்து ஏவுகணை தன்னைத் தானே அழிக்கும் கருவி கண்டுபிடிப்பு
பெங்களூர்: கெய்ன்ஸ் டெக்னாலஜி என்ற இந்திய நிறுவனம் ஏவுகணைகள் தன்னைத் தானே அழித்துக் கொள்ள உதவும் கருவியை கண்டுபிடித்துள்ளது.

மைசூரைச் சேர்ந்த கெய்ன்ஸ் டெக்னாலஜி நிறுவனம் ஏவுகணைகள் தன்னைத் தானே அழிக்க உதவும் கருவியை கண்டுபிடித்துள்ளது. எலக்ட்ரானிக் சேஃப் ஆர்ம் அன்ட் ஃபயர் சிஸ்டம்(இஎஸ்ஏஎப்எஸ்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த கருவி ஏவுகணையை பரிசோதிக்கையில் ஏதாவது தவறு நேர்ந்துவிட்டால் அதை அழிக்க உதவும். அந்த கருவி ஹைதராபாத்தில் உள்ள டிஆர்டிஓவின் ஆய்வு மைத்தில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 8 ஆண்டுகளாக பாதுகாப்பு துறையில் உள்ளது கெய்ன்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

கெய்ன்ஸ் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் சரத் பட் கூறகையில்,
கெய்ன்ஸ் டெக்னாலஜி நிறுவனத்திற்கு மைசூர் தவிர நாட்டின் 7 பகுதிகளில் ஃபேக்டரி உள்ளது. பெங்களூரில் டிசைன் மையம், மும்பையில் சர்வீஸ் மையம் ஆகியவை உள்ளது. மேலும் ஜுரிச் மற்றும் ஹாம்பர்கிலும் அலுவலகங்கள் உள்ளது.

1,200 ஊழியர்களை கொண்ட எங்கள் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.340 கோடி ஆகும். பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டின் கடற்படை பிரிவுக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பல காலமாக சப்ளை செய்து வரும் நிறுவனம் கெய்ன்ஸ். மேக் இன் இந்தியா திட்டம் உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களை உலகத் தரத்திற்கு எடுத்துச் செல்லும் என்றார்.
கெய்ன்ஸ் தயாரிப்புகளில் 30 சதவீதம் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஹாலந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கெய்ன்ஸ் நிறுவனம் ப்ளூடூத் பார் கோடு ஸ்கேனர், ப்ளூடூத் பல்பு உள்ளிட்டவற்றை தயாரித்துள்ளது.

மைசூர் மன்னர் திப்பு சுல்தான் அந்த காலத்திலேயே உள்நாட்டில் ஏவுகணை தயாரிக்க உதவியுள்ளார். அவர் ஆங்கிலேய படைக்கு எதிராக 2 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையை பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications