மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா டிசம்பரில் ஹைதராபாத் வருகை
ஹைதராபாத்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா டிசம்பர் மாதம் தனது சொந்த ஊரான ஹைதராபாத் வருகிறார்.
ஹைதராபாத்தில் உள்ள மைக்ரோசாப்ட் வளர்ச்சி மையத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வரும் நாதெல்லா ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோரை சந்தித்து பேச உள்ளார்.

2014-ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் தலைமை செயலதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக நாதெல்லா ஹைதராபாத் வருகிறார்.
தெலுங்கானா, மற்றும் ஆந்திரா முதல்வர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் நாதெல்லா, இரண்டு மாநிலங்களிலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விவிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
முன்னதாக, அமெரிக்கா சென்ற தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தரகரமா ராவ், ஹைதராபாத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விரிவாக்கம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications