பாகிஸ்தான் மீதான ராணுவ தாக்குதல்…. "மிட் நைட் பிளான்"…. அதிரடி மோடி !
டெல்லி: பாகிஸ்தான் தீவிரவாத முகாம் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்துவதற்கு ரகசிய திட்டமிட்டு செயல்படுத்தியது பிரதமர் மோடிதானாம். அவருடைய உத்தரவை ரகசியமாகவே பின்பற்றி தாக்குதலை நடத்தி இருக்கிறார் ராணுவ தலைமை தளபதி.
காஷ்மீர் பகுதியை ஒட்டிய பாகிஸ்தான் இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் எல்லையை தாண்டி தாக்குதலை நடத்தி வந்தது. அதன் உச்ச கட்டமாக கடந்த 18ம் தேதி யூரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் 18 ராணுவ வீரர்கள் பலியானர்கள்.

இந்த தாக்குதலுக்கு தக்க பதில் கொடுக்க பிரதமர் மோடி திட்டமிட்டு மிட்டிருந்தார். இதனால் நேற்று முன் தினம் திடீரென பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவையை கூட்டியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள ராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங்கையும் அழைத்திருந்தாராம் மோடி.

கூட்டத்தில் யூரி தாக்குதல் குறித்தும் அதற்கு பதிலடி கொடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. விவாதங்கள் முடிந்த பின்னர், இறுதியாக பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் தாக்குதலை நடத்த ராணுவ தளபதிக்கு தனியாக ரகசியமாக மோடி உத்தரவிட்டார். இந்த ரகசிய உத்தரவு அடிப்படையில்தான் பாகிஸ்தான் தீவிரவாத முகாம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
மோடியின் ரகசிய உத்தரவால்தான் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலை அடுத்து, அது குறித்த விளக்கம் அளிக்க பாதுகாப்பு அமைச்சரவை குழு கூட்டத்தை பிரதமர் மோடி அவசரமாக கூட்டினார். இந்தக் கூட்டத்தில்தான் மோடியின் அதிரடி ரகசிய திட்டம் குறித்து விளக்கப்பட்டதாம். மோடியின் இந்தத் திட்டத்திற்கு அனைவரிடம் இருந்து பாராட்டுகள் பறந்ததாம்.












Click it and Unblock the Notifications