ஒடிஷா: கோரபுட் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம்- குலுங்கிய கட்டிடங்கள்!
ஒடிஷாவில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.
கோரபுட்: ஒடிஷா மாநிலத்தின் கோரபுட் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 50,000க்கும் அதிகமானோரை காவு வாங்கியது. துருக்கி, சிரியாவில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச நாடுகள் துருக்கி, சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன.

துருக்கி, சிரியாவைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், ஜப்பான் மற்றும் நமது நாட்டின் பல பகுதிகளில் தொடர் நிலநடுக்கம் உணரப்படுகிறது.
இந்தோனேசியாவின் சுமத்ராவின் மேற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.6 ஆக பதிவானது. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
இதனைத் தொடந்து இன்று அதிகாலை இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தின் கோரபுட் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.8 அலகுகளாக பதிவாகி இருந்தது. மேலும் நாராயண்பட்னா, லக்ஷ்மிபூர் ஆகிய இடங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications