நேபாளம் , ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்!
ஸ்ரீநகர்: நேபாளம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவான இந்த மிதமான நிலநடுக்கத்தால், வீடுகள், கடைகள் உள்பட கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கின.
இந்த நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் அமைந்திருந்ததாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் காஷ்மீர் மக்கள் மிகவும் பீதிக்கு உள்ளானார்கள்.
பாகிஸ்தானின் லாகூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதனால் அந்த அதிகாலை நேரத்திலும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெட்ட வெளிப்பகுதிகளில் தஞ்சமடைந்தனர்.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் எதுவும் இல்லை.
மத்தியதரைக்கடல் நாடுகளிலும் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டது.