தடுப்பூசி போட்டால் ஆண்மைக் குறைவு.. பழங்குடியின மக்கள் நம்பிக்கை.. அமைச்சர் பகீர் தகவல்
நாசிக்: தடுப்பூசி குறித்து மக்களிடம் ஆண்மைக் குறைவு ஏற்படுவதாக பழங்குடியின மக்கள் ஒரு வித அச்சம் கொள்வதால் மகாராஷ்டிர மாநில அமைச்சர் சகன் புஜ்பால் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
நாசிக் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. முதல் அலையிலும் இரண்டாவது அலையிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவு பாதிப்பை கொடுத்து வருகிறது.
முதல் அலையில் தாராவி உள்ளிட்ட நகரங்களில் பெரும் பாதிப்பை கொடுத்தது. தற்போது இரண்டாவது அலையில் நாசிக், நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் அதிக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.

மருத்துவர்கள்
நாசிக் மாவட்டத்தில் கடந்த 9-ஆம் தேதி நிலவரப்படி நாசிக் நகரில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 56 ஆயிரத்து 84 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இறப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 865 ஆக அதிகரித்தது. கொரோனாவை தடுக்க தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

பிரச்சினை
ஆனால் தடுப்பூசியை போட்டுக் கொள்ள மக்கள் அச்சமடைகிறார்கள். யாராவது தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்நர் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனே தடுப்பூசியால்தான் பாதிப்பு ஏற்பட்டதாக பலர் தவறாக கருதுகிறார்கள்.

மருத்துவர்கள் சொல்வது என்ன
ஆனால் மருத்துவர்கள் சொல்வது என்னவெனில் தடுப்பூசி போட்டால் பக்க விளைவுகள் ஏற்படத்தான் செய்யும். அவை காய்ச்சல், சளி, உடல் அசதி, உடல் வலி போன்றவைத்தான் ஏற்படும் என்கிறார்கள். இந்த நிலையில் தடுப்பூசி போட்டால்தான் உயிருக்கு உத்தரவாதம் என அரசு கூறி வருகிறது.

மகாராஷ்டிரா
எனினும் தடுப்பூசி போட்டால் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான அச்சம் நிலவி வரத்தான் செய்கிறது. இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில அமைச்சர் சகன் புஜ்பால் செய்தியாளர்களிடம் கூறுகையில் நாசிக் மாவட்டத்தில் சில பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்கள் தடுப்பூசியால் ஆண்மைக்குறைவு ஏற்படுவதாக பயந்து அதை எடுத்துக் கொள்ள அச்சப்படுகிறார்கள். அச்சத்தை புறந்தள்ளி மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications