கமல் சொல்றதையெல்லாம் அங்க போய் சொல்லமுடியுமா?... ஜெயகுமார் நக்கல்
கமல் சொல்றதையெல்லாம் போய் ஜிஎஸ்டி மாநாட்டில் கூற முடியுமா என்று அமைச்சர் ஜெயகுமார் கிண்டலடித்துள்ளார்.
டெல்லி: கமல் கூறுவதையெல்லாம் ஜிஎஸ்டி மாநாட்டில் கூற முடியாது என்று டெல்லியில் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வருகிறது. இதில் சினிமாத் துறைக்கு 28 சதவீத வரி விதிப்பை விதித்துள்ளனர். இந்த நிலையில் தென்னிந்திய வர்த்தக சபை நிர்வாகிகள், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது கமல் பேசுகையில், மத்திய அரசு விதித்திருக்கும் ஜி.எஸ்.டி வரியால் திரைப்படத்துறை பெரிதும் பாதிக்கப்படும். சினிமா சூதாட்டம் போன்றது அல்ல; சினிமா என்பது ஒரு கலை. திரைத்துறையை நம்பி ஏராளமானோர் உள்ளனர். சினிமாவை சரியாகவும் தவறாகவும் பயன்படுத்திய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.

வேற்றுமையில் ஒற்றுமை
ஜி.எஸ்.டி வரியை தேசிய அளவில் வெளியிடப்படும் பாலிவுட் படங்களுக்கு நிகராக மாநில அரசுகளுக்கு விதிக்கக்கூடாது. அதேநேரத்தில், ஹாலிவுட் படத்திற்கு நிகராக இந்திய சினிமாவுக்கு ஜி.எஸ்டி வரிவிதிப்பதும் சரியல்ல. இதனால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது.

சினிமாவை விட்டே விலகுவேன்
எனவே, சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் முடிவை கைவிடுவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். டிக்கெட் மீதான ஜி.எஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரியை குறைக்காவிட்டால் நான் சினிமாவை விட்டு விலகுவேன் என்றார் கமல்ஹாசன்.

ஜிஎஸ்டி மாநாடு
இந்த வரி விதிப்பு குறித்து டெல்லியில் ஜிஎஸ்டி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் நிதி அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டனர். உணவு இடைவேளையின்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம் கமல் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

கமல் சொல்றதெல்லாம்...
அதற்கு மிகவும் காட்டமாக, கமல் சொல்வதையெல்லாம் மாநாட்டில் சொல்ல முடியுமா என்று நக்கல் அடித்தார் ஜெயகுமார். அதன்பின்னர் சினிமா துறை மீதான ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், சினிமாத் துறைக்கு விதிக்கப்பட்ட 28 சதவீதம் வரி விதிப்பு என்பது அதிகமாகும். அதை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். இதை அவர் சொன்னதற்காக நாங்கள் வலியுறுத்தவில்லை. நாங்களாகவே சினிமா துறையின் நலன் கருதி வலியுறுத்தியுள்ளோம் என்றார் ஜெயகுமார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications