அமைச்சர் கார் மோதி கல்லூரிப் பேராசியர் பலி…..!
திருவனந்தபுரம்: கேரள அமைச்சர் எம்.கே.முனீரின் கார் மோதி , இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
அமைச்சர் முனீர் பயன்படுத்திய கார் தொழிலதிபருக்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. இதில் அமைச்சர் சிவப்பு விளக்கு பொருத்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த கேரள அரசு, அமைச்சர்கள் உள்ளிட்ட விஐபிக்களுக்கு சிவப்பு விளக்கு பொருத்த மாநில அரசு அனுமதியளித்துள்ளது என்று கூறியுள்ளது
அரசு வாகனங்கள் பழுதானாலோ பயன்படுத்த முடியாத நிலையில இருந்தாலோ, அதுபோன்ற சமயங்களில் தனியார் வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் முனீர் பயணம் செய்த வாகனம் தொழிலதிபரின் வாகனமாக இருப்பினும் அவரும் கட்சியில் ஒரு பிரமுகர்தான் என முதலமைச்சர் உம்மன் சாண்டியும் ஆதரவாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications