தெலுங்கானா விவகாரம்: அமைச்சர்கள் குழு இன்று டெல்லியில் கூடுகிறது

ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், ஆந்திர மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டி கடந்த மாதம் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவைச் சந்தித்தார். அப்போது தெலுங்கானா கூடாது என்று அவர் வலியுறுத்தியதாக தெரிகிறது.
இந்த நிலையில், தெலுங்கானா விவாகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள அமைச்சர்கள் குழுவை சந்தித்து, ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தப் போவதாக சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்தப் பின்னணியில் தெலுங்கானா பிரச்சினை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு டெல்லியில் கூடி ஆலோசிக்க உள்ளது.
இதற்கிடையே, ஆந்திரமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என நேற்று மத்திய அமைச்சர் ஷிண்டே கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications