காதலனால் ஏற்பட்ட கருவைக் கலைக்க அனுமதி தேவை – 16 வயது சிறுமி நீதிமன்றத்தில் மனு!
சண்டிகர்: ஹரியானாவில் காதலனால் ஏமாற்றப்பட்டு உருவான கருவைக் கலைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று 16 வயது சிறுமி ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா மாவட்டத்தை சேர்ந்த தங்களின் 16 வயது மகளை காணவில்லை என அவளது பெற்றோர் கடந்த ஏப்ரல் மாதம் போலீசில் புகார் அளித்தனர்.
அந்தப் பெண்ணை தேடிவந்த போலீசார், கடந்த ஜூலை மாதம் அவளை கண்டுபிடித்து, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சிறுமியிடம் பாலியல் வன்முறை:
திருமண ஆசை காட்டி அந்த சிறுமியை வீட்டை விட்டு அழைத்துச் சென்று, மறைவான இடத்தில் தங்கவைத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார் சுர்ஜித் குமார் என்ற வாலிபர்.
போலீசார் வழக்கு:
இந்த வழக்கில் சுர்ஜித் குமார் உள்பட 7 பேர் மீது அம்பாலா மாவட்டத்தின் பிம்லேஷ் தன்வரில் உள்ள விரைவு நீதி மன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கருவைக் கலைக்க அனுமதி:
இந்நிலையில், சுர்ஜித்துடன் சென்று தனியாக வாழ்ந்தபோது தனக்கு உண்டான கருவைக் கலைக்க சட்டபூர்வமாக அனுமதி அளிக்குமாறு இந்த வழக்கை விசாரித்துவரும் இதே நீதி மன்றத்தில் அந்த சிறுமி மனு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கு விசாரணை:
அந்த சிறுமியின் சார்பில் அவளது பெற்றோர் தாக்கல் செய்துள்ள மனுவின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
சுர்ஜித் குமார் எதிர்ப்பு:
இன்று மீண்டும் விசாரணை தொடரவுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றார் முக்கிய குற்றவாளியான சுர்ஜித் குமார்.
சட்டப்படி திருமணம்:
தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் சட்டப்படி திருமணம் நடந்துள்ளதால், இந்த கருக்கலைப்புக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கக் கூடாது என்று மாவட்ட நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications