For Daily Alerts
Just In
உ.பி.யில் தொடரும் அட்டூழியம்!! பாலியல் துன்புறுத்தலை எதிர்த்த சிறுமி சுடப்பட்டார்!!
டெல்லி: உத்தரப்பிரதேசம் முசாஃபர்நகரில் தம் மீதான பாலியல் துன்புறுத்தலை எதிர்த்த சிறுமி சுடப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 2 தலித் சகோதரிகள் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.
அதைத் தொடர்ந்து மற்றொரு சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற கும்பல் அச்சிறுமி மீது தீ வைத்தது.
இந்நிலையில் முசாஃபர்நகர் அருகே மிராபூரில் பாலியல் துன்புறுத்தலை எதிர்த்த சிறுமி ஒருவர் சுடப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.
அடுத்தடுத்து நடைபெறும் பலாத்காரம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
Comments
English summary
A minor girl was shot for protesting against molestation in Mirapur in Muzaffarnagar, Uttar Pradesh.
Story first published: Monday, June 2, 2014, 8:46 [IST]