உ.பியில் இருந்து கோவாவுக்கு ஏசி பெட்டியில் பயணித்த பசுமாடு

உத்தர பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் கோவா தப்பிச் சென்ற பசு ஒன்று, மீண்டும் அதன் உரிமையாளருடன் செல்ல மறுத்து அடம்பிடிக்கும் சம்பவம் கோவா கடற்கரையில் நிகழ்ந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

பானாஜி: உத்தர பிரதேசத்தில் இருந்து கோவாவுக்கு ரயிலில் ஏசி பெட்டியில் பசுமாடு பயணித்துள்ளது. அதனை பார்த்த டிக்கெட் பரிசோதகர், பசு பாதுகாவலர்களுக்கு பயந்து கீழே இறக்கிவிடாமல் கோவா வரை செல்ல அனுமதியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரபிரதேசத்தில் விவசாயி ஒருவரின் பசு ஒன்று இரண்டு வாரங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளது. இதையடுத்து, விவசாயி பசு காணாமல் போனது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

Missing cow of Uttar Pradesh farmer found relaxing on Goa beach, refuses to go back

இந்நிலையில், கோவாவில் உள்ள பலோலம் கடற்கரையில் திரிந்த பசுவை பற்றிய செய்திகள் வாட்ஸ்ஆப்பில் பரவியது. இதனைக் கண்டுபிடித்த போலீசார், பசுவை அழைத்துவர விவசாயியுடன் கோவா விரைந்தனர்.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் இருந்து எப்படி அந்த பசு கோவாவிற்கு வந்தது என போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், லக்னோவில் இருந்து ரயில் மூலம் பசு கோவா வந்துள்ளது தெரியவந்துள்ளது.

ரயிலில் ஏசி அறையில் பயணம் செய்த பசுவை டிக்கெட் பரிசோதகர் கவனித்துள்ளார். பசுவை கீழே இறக்கவிட்டால், பசு பாதுகாப்பு படையினர் மூலம் தனக்கு ஏதேனும் பிரச்சனை வரலாமென எண்ணிய அவர், பசுவைதொந்தரவு செய்யாமல் விட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பசுவை வீட்டுக்கு அழைத்து செல்ல கோவா சென்ற விவசாயி, பசுவை தன்னுடன் வரும்படி அழைத்துள்ளார். ஆனால் பசுவோ அவருடன் செல்ல மறுத்து முரண்டு பிடித்துவருகிறது.

பசுவை வலுக்கட்டாயமாக இழுத்த போதிலும், அது அந்த இடத்தை விட்டு நகராமல் விடாப்பிடியாக அங்கேயே அமர்ந்துவிட்டது.இந்நிலையில், பசுவின் உரிமையாளரான அந்த விவசாயி செய்வதறியாமல் தவித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+