For Quick Alerts
For Daily Alerts
Just In
மாயமான விஹெச்பி தலைவர் தொகாடியா மருத்துவமனையில் சுயநினைவில்லாத நிலையில் அனுமதி!
விஹெச்பி தலைவர் தொகாடியா மருத்துவமனையில் சுயநினைவில்லாத நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அகமதாபாத்: மாயமான விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் தொகாடியா சுயநினைவில்லாத நிலையில் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அகில இந்திய தலைவர் பிரவீன் தொகாடியா நேற்று திடீரென மாயமானதாக கூறப்பட்டது. குஜராத் போலீசார்தான் அவரை கைது செய்திருப்பதாக விஹெச்பி நிர்வாகிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.
ஆனால் குஜராத் போலீசார் இதனை மறுத்திருந்தனர். இருந்த போதும் தொகாடியாவை விடுவிக்கக் கோரி விஹெச்பி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அகமதாபாத் மருத்துவமனையில் சுயநினைவில்லாத நிலையில் தொகாடியா அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
தொகாடியா உடலில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து போனதால் அவர் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது,
English summary
The Vishwa Hindu Parishad (VHP) president, who was believed to have gone missing, has been found in a hospital in Ahmedabad
Story first published: Tuesday, January 16, 2018, 8:22 [IST]