சாரதா குழும தலைவர் எனக்கு ரூ.1.76 கோடி அளித்தார்: நடிகர் மிதுன்
கொல்கத்தா: சுதிப்தோ சென் பெரிய அளவில் ஊழல் செய்ய திட்டமிட்டார். ஆளுங்கட்சியின் பெரிய தலைவர்களுடன் தொடர்பில் இருந்தால் ஊழல் செய்யலாம் என்று அவர் நினைத்தார்.
அமலாக்க இயக்குனரகம் விசாரணை நடத்தியதில் சுதிப்தோ சென் பல பிரபலங்களுக்கு பெரிய தொகைகளை அளித்தது தெரிய வந்துள்ளது. அவர் பிரபலங்களுக்கு பணம் அளித்துள்ளபோதிலும் ஒப்பந்தம் எதுவும் அளிக்கவில்லை.
மிதுன் சக்ரபர்த்தி விவகாரமும் இப்படி தான். தான் எப்படி சென்னை சந்தித்தேன், தனக்கு எவ்வளவு பணம் அளிக்கப்பட்டது என்பதை மிதுன் எழுத்துப்பூர்வமாக அமலாக்க இயக்குனரகத்திடம் அளித்துள்ளார்.

நடிகரும், எம்.பி.யுமான மிதுன் என்ன தெரிவித்தார்?
சேனல் 10ல் நிகழ்ச்சி ஒன்றை நடத்த சென் நடிகரும், ராஜ்யசபா எம்.பி.யுமான மிதுன் சக்ரபர்திக்கு ரூ.1.76 கோடி பணம் அளித்துள்ளார். அந்த டிவி நிகழ்ச்சியை நடத்துமாறு தன்னை அறிவுறுத்தி குனால் கோஷ் தான் தன்னை சென்னுக்கு அறிமுகம் செய்து வைத்ததாக சாரதா ஊழல் குறித்து விசாரிக்கும் அமலாக்க இயக்குனரகத்திடம் மிதுன் தெரிவித்துள்ளார்.
அமலாக்க இயக்குனரகம்
அமலாக்க இயக்குனரகத்தின் கண்காணிப்பில் இருந்த மிதுன் தனது பதிலை எழுத்துப்பூர்வமாக அளித்தார். பங்களா போல்சே சோங்கே மிதுன் என்ற நிகழ்ச்சியை நடத்த தனக்கு ரூ.1.76 கோடி அளிக்கப்பட்டதாக மிதுன் அமலாக்க இயக்குனரகத்திடம் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளார்.
அந்த நிகழ்ச்சி செய்தி தொலைக்காட்சி சேனலான சேனல் 10ல் ஒளிப்பரப்பானதாக மிதுன் தெரிவித்துள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு பணம் பெற்றபோதிலும் அது குறித்து தனக்கும், சென்னுக்கும் இடையே எந்தவித ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்று மிதுன் தெரிவித்துள்ளார்.
மிதுன் எப்படி?
சாரதா குழுமத்திற்கு சொந்தமான பெங்கால் மீடியா பிரைவேட் லிமிடெட் மூலம் தான் தனக்கு பணம் அளிக்கப்பட்டது என்று மிதுன் அமலாக்க இயக்குனரகத்திடம் தெரிவித்துள்ளார். பணம் வங்கி மூலம் அளிக்கப்படும் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
2010ம் ஆண்டு நவம்பர் மாதம் தான் முதன்முதலில் சுதிப்தோ சென்னை சந்தித்ததாக மிதுன் மேலும் தெரிவித்துள்ளார். அவரை சந்திக்குமாறு குனால் கோஷ் தன்னிடம் கூறியதாகவும், அரசியல் விவாத நிகழ்ச்சியை நடத்துமாறும் அவர் கூறினார் என்றும், தானும் அவ்வாறு செய்ததாகவும் மிதுன் தெரிவித்துள்ளார்.
எனக்கு ஊழல் பற்றி எதுவும் தெரியாது. எனக்கு அளிக்கப்பட்ட பணத்திற்கு நான் வரி செலுத்திவிட்டேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விசாரணை
சாரதா குழுமம் பல பிரபலங்களுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. அந்த பிரபலங்கள் ஒன்று திரிணாமூல் காங்கிரஸுக்கு நெருக்கமானவர்கள் அல்லது கட்சியுடன் தொடர்புடையவர்கள். அனைத்து விவகாரங்களிலும் சென் பெரிய தொகையை அளித்துள்ள போதிலும், அது குறித்து முறையான ஒப்பந்தகங்கள் எதையும் அவர் போடவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications