மிசோரம்.. காங்கிரஸ் ஆதிக்கத்தை எதிர்கொள்ள வியூகம் வகுக்கும் மாநிலக் கட்சிகள்
அய்ஸ்வால்: சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்ளும் 5 மாநிலங்களில் மிசோரம் மாநிலம் தான் மிகக் குறைவான தொகுதிகளைக் கொண்டது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆதிக்கம் நீடிப்பதால் அக்கட்சியை எதிர்கொள்ள மாநிலக் கட்சிகள் வியூகம் வகுத்து செயல்படுகின்றன.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் மொத்தம் 40 தொகுதிகள்தான் உள்ளன. இதில் பொதுத் தொகுதி என்பது ஒன்றே ஒன்றுதான். எஞ்சிய 39 தொகுதிகளும் பழங்குடியினத்தவருக்கான தொகுதிகளே..
மிசோரமில் டிசம்பர் 4-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 8-ந் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

2008 தேர்தலில்..
கடந்த 2008-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மொத்தம் போட்டியிட்டோர் 206 பேர்.

32 இடங்களில் காங்கிரஸ்..
கடந்த தேர்தலில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு 32 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது.

பாஜக, தேசியவாத காங்.- 0
பாரதிய ஜனதா கட்சி 9 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் போட்டியிட்டன. ஆனால் இரு கட்சிகளுக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

மாநில கட்சிகள்..
மிசோரம் மாநில கட்சியான எம்.என்.எஃப் 39 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களிலும் எம்.பி.சி. 16 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களையும் znp கட்சி 17 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களையும் கைப்பற்றின.

ஐக்கிய ஜனதா தளம்..
மிசோரம் மாநிலத் தேர்தலில் 2 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் போட்டியிட்டுப் பார்த்தது. ஆனால் ஒட்டுமொத்தமாக 196 வாக்குகள்தான் அக்கட்சிக்கு கிடைத்தன.

காங்கிரஸ் ஆதிக்கம்
இம்மாநிலத்தில் தற்போது, காங்கிரஸ் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது. இதனால் சட்டசபை தேர்தலில் காங்கிரஸை எதிர்கொள்ள மாநிலக் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.












Click it and Unblock the Notifications