பாட்னாவில் லாலு, மமதா பானர்ஜியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் ஆகியோரை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ்குமார் இன்று முதல்வராக பதவியேற்றார். பீகாரில் கூட்டணி ஆட்சி என்பதால் லாலு பிரசாத் யாதவின் மகன்கள் இருவரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். லாலுவின் இளைய மகனுக்கு துணை முதல்வர் பதவி தரப்பட இருக்கிறது.

இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று பாட்னா வந்தடைந்தார். ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவை நேற்று மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது தேசிய அளவில் மதச்சார்பற்ற அணி உருவாக்கப்பட வேண்டும் என்பது குறித்து இருவரும் விவாதித்தனர்.
இதனைத் தொடர்ந்து நிதிஷ் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். தமிழக அரசியல் நிலைமைகள் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் மமதா.
இச்சந்திப்புகளின் போது தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications