எம்எல்ஏ-க்களுக்கு இரு மடங்கு சம்பளம் உயர்வு...நம்ம ஊரில் இல்ல தெலங்கானாவில் !
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் சம்பளத்தை இருமடங்காக உயர்த்த வகை செய்யும் சட்ட மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
தெலங்கனா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. அங்கு கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும என கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்றம் மற்றும் சட்ட மேலவையின் அனைத்து உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் பென்சனை இரு மடங்கிற்கும் அதிகமாக உயர்த்த வகை செய்யும், சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவை விவகாரங்கள் துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் அறிமுகம் செய்தார்.
அதற்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒருமனதாக ஆதரவளித்ததையடுத்து, மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியதும் விரைவில் சட்டமாக்கப்பட உள்ளது. தெலங்கானா எம்.எல்.ஏ.க்களுக்கு இப்போது மாதச் சம்பளம் ரூ.95 ஆயிரமாக உள்ளது.
சம்பள உயர்வு மூலம் இனி மாதச் சம்பளம் ரூ.2 லட்சத்துக்கு 30 ஆயிரமாக அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதனால், அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 42.67 கோடி ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications