காஷ்மீர் மாநில வளர்ச்சிக்கு ரூ.80 ஆயிரம் கோடி பேக்கேஜ்: மோடி அறிவிப்பு
சென்னை: ஜம்மு காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக ரூ.80 ஆயிரம் கோடி பேக்கேஜ் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார்.
காஷ்மீரில் பாஜக-மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. மார்ச் 1ம் தேதி, ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி இன்று தலைநகர், ஸ்ரீநகர் சென்றார். அங்கு ஷேர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மக்கள் மத்தியில் மோடி பேசியதாவது: கடந்த காலங்களில் நாட்டின் எல்லா மூலையிலுள்ள மக்களுமே, பணம் சேர்த்துக்கொண்டு காஷ்மீர் சென்று சுற்றுலா மேற்கொள்ள ஆசைப்படுவார்கள்.

அந்த பழைய பொற்காலத்தை திரும்ப கொண்டுவர வேண்டும் என்பதே எனது விருப்பம். சச்சின், சேவாக் அல்லது டோணி விளாசும் சிக்சர்களை அடிக்க உதவும் பேட் காஷ்மீரில் தயாரானது என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெருமை.
காஷ்மீர் இந்தியாவின் ஆன்மா, அது ஒருங்கிணைந்த ஒரு பகுதி.
காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக, ரூ.80 ஆயிரம் கோடி பேக்கேஜை நான் அறிவிக்கிறேன். இது வெறும் தொடக்கம்தான். இந்த நிதி உதவி மேலும் தொடரும். காஷ்மீருக்கு செலவிட மத்திய அரசின் கருவூலத்தில் போதிய பணம் உள்ளது. பணம் மட்டுமின்றி, எங்களுக்கு மனமும் உள்ளது. இவ்வாறு மோடி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications