வடகிழக்கு மாநில அழகான போட்டோக்களை ஷேர் பண்ணுங்க... மோடி வேண்டுகோள்
அசாம்:அசாம் சென்றுள்ள பிரதமர் மோடி... வடகிழக்கு மாநிலங்களில் தாம் எடுத்து புகைப்படங்களை பகிருமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
2 நாள் சுற்றுப்பயணமாக வடகிழக்கு மாநிலமான அசாமுக்கு பிரதமர் மோடி சென்றிருக்கிறார். பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவரின் வடகிழக்கு மாநில பயணத்துக்கு எதிராக அசாமில் மாணவர் அமைப்பினர் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந் நிலையில், வட கிழக்கு மாநிலஙகளில் தாம் எடுத்த புகைப்படங்களை பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரிலும் அவர் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் பதிவு செய்துள்ளதாவது:
வடகிழக்கு மாநிலங்களில் அழகு அருமையாக உள்ளது. இதற்கு முன்பு நீங்கள் இது போன்று அழகான புகைப் படங்களை வைத்துள்ளீர்களா?அவற்றை பதிவிடுங்கள். நானும் அதுபோன்ற சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
Yesterday, had requested you all to share pictures of your visits to the Northeast on Instagram using #MagnificentNortheast.
— Narendra Modi (@narendramodi) February 9, 2019
I shared some of the pictures in a Story on my page. Do have a look! https://t.co/HL4RbIyE9z












Click it and Unblock the Notifications