60 ஆண்டுகாலம் ஒன்றும் செய்யாதவர்கள் என்னிடம் ரிப்போர்ட் கார்டு கேட்கிறார்கள்: காங்.மீது மோடி தாக்கு
Subscribe to Oneindia Tamil
சண்டிகார்: நாட்டுக்கு 60 ஆண்டுகாலம் ஒன்றுமே செய்யாதவர்கள் என்னிடம் ரிப்போர்ட் கார்டு கேட்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் வருகிற 15-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஹரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கினார். ஹரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கிய பேசிய பிரதமர் மோடி பேசியதாவது:
- ஹரியானாவில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான தருணம் வந்துவிட்டது.
- ஹரியானாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் மாநிலத்தின் தலைவிதியை தீர்மானிப்பதாகும்.
- ஹரியானா மாநிலம் வளர்ச்சிபெற இங்கு ஆட்சி மாற்றம் அவசியம் தேவை.
- மானசரோவருக்கு செல்ல இரண்டாவது வழியை திறக்க சீனாவை சம்மதிக்க செய்தது பாரதிய ஜனதா அரசாகும். 60 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் எதையும் செய்யவில்லை.
- நாட்டுக்கு 60 ஆண்டுகாலம் ஒன்றுமே செய்யாதவர்கள் என்னிடம் நான் கடந்த சிலமாதங்களாக செய்த பணிக்கு என்னிடம் ரிப்போர்ட் கார்டு கேட்கிறார்கள். அவர்கள் பொய்களை பரப்பி வருகின்றனர்.
- பாசுமதி அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக மக்களிடம் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் உண்மை என்றால் ஹரியானா காங்கிரஸ் அரசே ஏற்றுமதிக்கு 4% வரியை ஏற்றியுள்ளது.
- ஹரியானா போலீஸ் என்னுடைய கருத்தை கேட்கமாட்டார்கள், அவர்கள் காங்கிரஸ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர்.
- ஹரியானா வளர்ச்சி பெற வேண்டும் என்றால், நீங்கள் இந்த மாநிலத்தில் காங்கிரஸ் அரசை வெளியேற்ற வேண்டும்.
- விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்காக 'பிரதமர் விவசாய நீர்ப்பாசன திட்டம்', 'பிரதமர் ஜன் தன் யோஜனா ஆகியவற்றை நாங்கள் தான் அறிமுகம் செய்தோம். நான் உங்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றால், நீங்கள் ஹரியானாவில் நிலையான அரசை கொடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications