சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது: மோடி
மும்பை: சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
வர்த்தகசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று மாலை மும்பை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
தம்மை வரவேற்க வந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களிடம் பேசிய மோடி, நான் சிவாஜியின் மண்ணுக்கு வந்துள்ளேன். சிவாஜியின் இந்த மண் என்னை ஆசிர்வதிக்கும்.
இங்கே நீங்கள் கூடியிருப்பது மாற்றத்துக்கான அடையாளம். நமது நாட்டை பொறுப்பற்றவர்கள் கையில் ஒப்படைக்கக் கூடாது. நாங்கள் நமது நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடக் கூடாது.
காங்கிரஸ் அரசால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என்னால் மத்தியில் நல்ல அரசாங்கத்தை நடத்த முடியும் என்று நிரூபிக்க முடியும். மத்திய அரசு சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது என்றார்.