வெற்று வார்த்தைகளின் மூலம் மக்களை ஏமாற்றிய பாஜக தோல்வியடைந்துவிட்டது: மன்மோகன் சிங்
வெறும் வெற்று வார்த்தைகளின் மூலம் மக்களை ஏமாற்றிய பாஜக தோல்வியடைந்துவிட்டது என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : வெற்று வார்த்தைகளின் மூலமே மக்களை ஏமாற்றி வந்த பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் மாநாட்டு நிகழ்வில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 84வது மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். வருகிற காலங்களில் காங்கிரஸ் கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் பலரும் தங்களது கருத்துகளை இம்மாநாட்டில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
மேலும் இன்றைய நிகழ்வில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியால் பொருளாதாரம் நிலைகுலைந்துள்ளது.
பொருளாதார நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்பட்ட தவறான முடிவுகளான பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.ஸ்.டி வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் பொருளாதாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பல சிறுதொழில் நிறுவனங்களை அழித்து விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
காஷ்மீர் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும், அதை பாஜக மிகவும் மோசமாகக் கையாண்டு வருவதையும் குறிப்பிட்ட மன்மோகன் சிங், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாஜக எந்த அளவு சீரழித்துள்ளது என்பதையும் விளக்கிப்பேசினார்.
வெற்று வார்த்தைகளால் மட்டுமே மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து வந்த பாஜக அரசு தோல்வியடைந்து விட்டதாகவும், எதிர்காலத்தில் நாட்டை வழிநடத்திச் செல்ல காங்கிரஸ் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் அவர் தனது உரையில் விளக்கினார்.
-
கடைசி பஸ் பிடிக்க போற மாதிரி அவசரப்பட்டது எல்லாம்.. இதுக்குத்தானா? வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்! -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications