பிரணாப் தரும் இப்தார் விருந்தில் மோடி பங்கேற்க மாட்டார்
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை தரும் இப்தார் விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. அவர் அந்த சமயத்தில் வட கிழக்கு மாநில முதல்வர்களைச் சந்திக்கவுள்ளார்.
இந்த முதல்வர்கள் சந்திப்பு முன் கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்பதால் அதை ரத்து செய்ய முடியாத நிலையில் பிரதமர் இருப்பதாக பிரதமர் அலுவலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிக்கிம் உல்ளிட்ட வட கிழக்கு மாநில முதல்வர்கள் இன்று இரவு 7 மணியளவில் பிரதமர் மோடியைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். எனவே பிரணாப் தரும் இப்தார் விருந்தில் பிரதமர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வட கிழக்கு மாநில முதல்வர்களுடன் மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார் பிரதமர். இதன் காரணமாகவே அவர் இப்தார் விருந்தில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications