மீண்டும் மோடியுடன் ஒபாமா பேச்சு: இந்தியா–அமெரிக்க உறவு மேம்பாடு குறித்து ஆலோசனை
டெல்லி: இந்தியா -அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடியும் அமெரிக்கா அதிபர் ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளார்.
நாட்டின் 14வது பிரதமராக நரேந்திர மோடி வரும் 26-ந் தேதி பதவி ஏற்கிறார். ஏற்கனவே, பாரதிய ஜனதா வெற்றி பெற்றவுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் மோடியை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது தேர்தலில் அவர் பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில், அதிகாரபூர்வமாக பிரதமரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நேற்று மீண்டும் மோடியுடன் தொலைபேசியில் ஒபாமா பேசினார்.
அப்போது இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கிமூன் ஆகியோரும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஐ.நா.வில் இந்தியாவில் மதிப்பு மரியாதை மிகவும் போற்றத்தக்க வகையில் உள்ளது. பெருமைப்படத் தக்கவகையில் உறவு சிறப்பாக உள்ளது என்றும் பான்கிமூன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications