பூடான் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சில் தவறுகள்: ட்விட்டரில் கலாய்க்கும் மக்கள்
டெல்லி: பூடான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பூடான் என்பதற்கு பதிலாக நேபாள் என்று வாய் தவறி கூறியது பற்றி பலரும் ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக ஞாயிற்றுக்கிழமை பூடான் சென்றார். பிரதமராக அவர் பதவியேற்ற பிறகு மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மோடி பூடான் நாடாளுமன்றத்தில் இன்று காலை உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பூடான் என்று கூறுவதற்கு பதில் வாய் தவறி நேபாள் என்றது குறித்து பலரும் ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்கள். அதில் சில ட்வீட்களை பார்ப்போம்.
|
தவறு
பிரதமர் மோடி பூடானை நேபாள் என்று கூறியுள்ளார், சிரிப்பை அடக்க முடியவில்லை. என்ன ஒரு மாபெரும் தவறு என்று மிஹிர் பாத்யே என்பவர் ட்வீட் செய்துள்ளார்.
|
மோடி
இன்று மோடி பூடானை நேபாள் என்று கூறியுள்ளார். அவர் ஐ.நா. மற்றும் பிரிக் மாநாட்டில் இந்தியாவை நெளிய வைக்க மாட்டார் என்று நம்புவோம் என ஜெயேஷ் ஷிண்டே என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
மனிதன் தானே
பூடான் நாடாளுமன்றத்திற்குள் நின்று கொண்டு பூடானை நேபாள் என்று மோடி கூறியிருப்பது அவரும் மனிதர் தான், தவறுகள் செய்யத் தான் செய்வார் என்பதை காண்பிக்கிறது என வசந்த் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
|
கண்டனம்
பூடானில் டிம் மோடி உரை, நேபாள், லடாக்கை போட்டு குழப்பியது, பூடான் ஜனநாயக நாடானதற்கு கண்டனம் தெரிவித்தது என சூர்யநாராயண் கணேஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.
|
புவிவியல்
தயவு செய்து தற்போதாவது மோடி புவியியலை கற்கட்டும். ஆனால் டாக்சிலா பீகாரில் இருக்கிறது என்று நினைப்பவரிடம் இருந்து என்ன எதிர்பார்ப்பது என அபினவ் சர்மா தெரிவித்துள்ளார்.
|
குஜராத்தி
ஒருவேளை குஜராத்தியில் பூடானை நேபாள் என்பார்களோ? என ப்ரம்பி என்பவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications