ஜப்பான் ஒத்துழைப்புடன் வாராணசி அபரிமிதமான வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி நம்பிக்கை
வாராணசி: ஜப்பான் ஒத்துழைப்புடன் வாராணசி அபரிமிதமான வளர்ச்சியை எட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி சென்றார். அங்கு நடைபெற்ற "கங்கை ஆர்த்தி' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் மோடி பேசுகையில்,

உலகில் உள்ள ஜீவராசிகளுக்கும் உணவு, காற்று போன்ற உயிர்க் காரணிகளைக் காட்டிலும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உறவு மிகவும் அவசியமானது. அதேபோல், ஜப்பானுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவும் மிகவும் மகத்தானது. நீண்டகால பாரம்பரியமிக்க இந்த உறவு, எதிர்காலத்தில் மேலும் வலுவடையும்.
ஜப்பானின் க்யோட்டோ நகரத்துக்கும், இந்தியாவின் வாராணசி நகரத்துக்கும் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. ஜப்பானின் ஒத்துழைப்புடன் வாராணசி அபரிமிதமான வளர்ச்சியை எட்டும் என நம்புகிறேன் என கூறினார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மோடியும், ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவும் டெல்லிக்கு கிளம்பி சென்றனர். முன்னதாக கங்கை ஆரத்தி நிகழ்ச்சி சிறப்பாக நடத்த உதவிய உத்திரப்பிரேதேச அரசுக்கும் அதிகாரிகளுக்கும் பிரதமர் மோடி டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
My gratitude to UP Govt, officials & everyone who worked towards making today's Varanasi visit memorable & showing the city to PM @AbeShinzo
— Narendra Modi (@narendramodi) December 12, 2015 











Click it and Unblock the Notifications