பிரதமர் மோடிக்கு கொஞ்சம் 'டைம்' கொடுங்கள்: சொல்கிறார் ராஜ் தாக்கரே
தானே: பிரதமர் மோடி செயல்பட அவருக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மக்கள் நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்து தான் லோக்சபா தேர்தலில் அவருக்கு வாக்களித்தனர். மக்கள் அவரை பிரதமராக தேர்வு செய்துள்ளனர். அவர் செயல்பட சற்று கால அவகாசம் அளிக்க வேண்டும். நான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மோடி பற்றி தெரிவித்த சில கருத்துகளை மீடியா மாற்றி கூறிவிட்டது. தயிர் பானையை உடைக்கும் திருவிழாவில் பாதுகப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த திருவிழாவில் மனித பிரமிட் அமைக்க அனுமதி அளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்பதை நேரம் வருகையில் கூறுவேன் என்றார்.












Click it and Unblock the Notifications