இளைஞர்களிடம் இருந்து திருடி அனில் அம்பானியின் பாக்கெட்டை நிரப்பும் மோடி- ராகுல் தாக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இளைஞர்களிடம் இருந்து திருடி அனில் அம்பானியின் பாக்கெட்டை நிரப்புகிறார் மோடி என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார்.

ரஃபேல் விமானம் கொள்முதல் விவகாரத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிட்டெட் என்ற நிறுவனத்திடம் இருந்து ரஃபேல் விமான ஒப்பந்தத்தை அனில் அம்பானியிடம் கொடுத்தாக கூறப்படுகிறது.

Modi Stole Money From Youth to Fill Debt-ridden Anil Ambanis Pockets: Rahul Gandhi

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில் நான் இந்த தேசத்தின் பாதுகாவலன் என்று மோடி கூறியிருந்தார். இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில் நான் இந்த தேசத்தின் பாதுகாவலன் என்று கூறிய மோடி இளைஞர்களிடம் இருந்து பணத்தை திருடி அனில் அம்பானியின் பாக்கெட்டில் நிரப்புகிறார். மல்லையாவுக்கு கடன் இருப்பதை போல் அம்பானிக்கு ரூ. 45 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது.

எதன் அடிப்படையில் இந்துஸ்தான் நிறுவனத்திடம் இருந்து அம்பானிக்கு ரஃபேல் ஒப்பந்தத்தை கொடுத்தார். இதுவரை அம்பானி தன் வாழ்நாளில் ஒரு விமானத்தையும் உருவாக்கியதில்லை.

நம் ராணுவ வீரர்கள் எல்லையில் தங்கள் உயிரை பணயம் வைத்து நாட்டை காப்பாற்றி வரும் நிலையில் மோடியோ அவர்களின் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுத்து அம்பானியின் பாக்கெட்டுக்கு நிரப்புகிறார் என்று ராகுல் விமர்சனம் செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+