இளைஞர்களிடம் இருந்து திருடி அனில் அம்பானியின் பாக்கெட்டை நிரப்பும் மோடி- ராகுல் தாக்கு
டெல்லி: இளைஞர்களிடம் இருந்து திருடி அனில் அம்பானியின் பாக்கெட்டை நிரப்புகிறார் மோடி என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார்.
ரஃபேல் விமானம் கொள்முதல் விவகாரத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிட்டெட் என்ற நிறுவனத்திடம் இருந்து ரஃபேல் விமான ஒப்பந்தத்தை அனில் அம்பானியிடம் கொடுத்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில் நான் இந்த தேசத்தின் பாதுகாவலன் என்று மோடி கூறியிருந்தார். இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில் நான் இந்த தேசத்தின் பாதுகாவலன் என்று கூறிய மோடி இளைஞர்களிடம் இருந்து பணத்தை திருடி அனில் அம்பானியின் பாக்கெட்டில் நிரப்புகிறார். மல்லையாவுக்கு கடன் இருப்பதை போல் அம்பானிக்கு ரூ. 45 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது.
#WATCH PM Modi could not look me in the eye when I asked him why Anil Ambani was given a contract despite there being Rs. 45,000 crore debt on him: Congress President Rahul Gandhi on #Rafale deal pic.twitter.com/5CR0jDh9cL
— ANI (@ANI) September 25, 2018
எதன் அடிப்படையில் இந்துஸ்தான் நிறுவனத்திடம் இருந்து அம்பானிக்கு ரஃபேல் ஒப்பந்தத்தை கொடுத்தார். இதுவரை அம்பானி தன் வாழ்நாளில் ஒரு விமானத்தையும் உருவாக்கியதில்லை.
நம் ராணுவ வீரர்கள் எல்லையில் தங்கள் உயிரை பணயம் வைத்து நாட்டை காப்பாற்றி வரும் நிலையில் மோடியோ அவர்களின் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுத்து அம்பானியின் பாக்கெட்டுக்கு நிரப்புகிறார் என்று ராகுல் விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications