மோடிதான் பிரதமர்… ஆனாலும் நெருக்கடியை சந்திப்பார்: பீதி கிளப்பும் ஜோதிடர்கள்
சென்னை: நரேந்திரமோடி நிச்சயம் இந்தியாவின் பிரதமராவார், பாஜக கூட்டணி 333 இடங்களில் வெல்லும் என்றும், அதிமுக 33 இடங்களில் வெல்லும் என்று கணித்து கூறினர் ஜோதிடர்கள்.
ஜோதிடர்களின் கணிப்பு இந்தமுறை பொய்யாகவில்லை, அவர்களை சொன்னதை விட கூடுதலான இடங்களைப் பெற்று குஷியில் உள்ளனர் பாஜகவினர்.
அதேபோல அதிமுகவினரும் கூடுதல் குஷியில் இருக்கின்றனர். இந்தநிலையில் மீண்டும் ஜோதிடர்கள் தங்களின் கணிப்புகளை தட்டிவிட்டுள்ளனர்.
மோடி வழிநடத்துவார்.
இந்தியாவின் புதிய அரசை நிச்சயம் நரேந்திர மோடியே வழிநடத்தப்போகிறார். ஆனாலும் அவர் எவ்வளவு பலமான ஆட்சியை நடத்தினாலும் பிரச்சனைகளைச் சந்திப்பார்' என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
நெருக்கடி உறுதி
ஹரித்வாரில் உள்ள ஜோதிட ரத்னா கௌசிக் என்பவர் தனது கணிப்பில், "அடுத்த பிரதமர் மோடிதான் என்றாலும் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள் பல. இதனால் அக்டோபர் மாதம் அவர் பெரிய நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார். ஆனாலும், மோடியே பலமான தலைவராக உருவெடுப்பார் என்று கூறியுள்ளார்.
அசைக்க முடியாத ஆட்சி
கொல்கத்தாவில் உள்ள ஜோதிடர் ராகேஷ் ராஜ் குப்தா என்பவர் தனது கணிப்பில், "5 ஆண்டுகள் மோடியின் அரசு எந்த விதச் சிக்கல்களும் இன்றி நடைபெறும்" என்று கூறியுள்ளார்.
நாட்டின் மதிப்பு உயரும்
மேலும், "மோடியின் ஆட்சிக் காலத்தில் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்கு உயரும். ஜூலை 2015 முதல் நவம்பர் 2015 வரையிலும், பிறகு 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் மோடி அரசு சில நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று கூறியுள்ளார்.
கடுமையான சவால்கள்
2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தன் கட்சியிலிருந்தும், எதிர்கட்சியிலிருந்தும் மோடி கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடும்" என்றும் கணித்துள்ளார் குப்தா.