ஜனாதிபதியை மாலை 3.15 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மோடி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மாலை 3.15 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் நரேந்திர மோடி.
டெல்லியில் நடைபெறும் பாரதிய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயகக் கட்சிகளின் கூட்டத்தில் மோடி முறைப்படி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அதன் பின்னர் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் தலைமையில் வைகோ, பிரகாஷ்சிங் பாதல் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்களுடன் மாலை 3.15 மணிக்கு ஜனாதிப பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மோடி.
அப்போது தம்மை ஆதரிக்கும் எம்.பிக்களின் பட்டியலையும் ஜனாதிபதியிடம் மோடி கையளிப்பார். இதைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பார்.












Click it and Unblock the Notifications