ராஜஸ்தானில் மூவர்ணக் கொடியை ஏற்றிய சிறப்பு விருந்தினர் யாரென்று பாருங்களேன்....
ராஜஸ்தானில் சிறப்பு விருந்தினர் கொடியேற்றுவதற்குள் அங்கிருந்த 2 குரங்குகள் மூவர்ணக் கொடியை ஏற்றின.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை அங்கு வந்த இரு குரங்குகள் ஏற்றின. இதற்கு மாணவர்கள் கைதட்டி கரகோஷம் எழுப்பினர்.
சுதந்திர தினம் நாடு முழுவதும் கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஆங்காங்கே பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.

ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் குரங்குகள் கொடியேற்றின. அஜ்மர் மாவட்டத்தின் புஷ்கர் என்ற பழம்பெரும் நகரம் உள்ளது.
இங்குக் குரங்குகள் அதிகளவில் காணப்படுகின்றன. பிரக்யா பால நிகேதன் என்ற பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு தேசியக் கொடியேற்ற பள்ளி நிர்வாகம் ஆயத்தமானது.
சிறப்பு விருந்தினர் கொடியேற்ற வருவதற்குள் அப்போது சரியாக 8 மணிக்கு அங்கு வந்த இரு குரங்குகள் கம்பத்தின் மீது ஏறின. பின்னர் கம்பத்தில் கட்டியிருந்த கயிற்றை பிடித்து இழுத்தன.
அப்போது பூமழை தூவியது. தேசியக் கொடியும் பறந்தது. இதைக் கண்ட மாணவர் சிரிப்பலை மற்றும் கரகோஷம் எழுப்பினர். எதேச்சையாகக் கயிற்றை பிடித்து இழுத்தாலும் குரங்குகள் கொடியேற்றியதாகவே இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரப்பி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications