For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வட இந்தியாவில் விரைவில் பருவமழை.. ஜூன் 27க்கு பிறகு இடியுடன் கூடிய மழை!

வடஇந்தியாவில் பருவமழை விரைவில் தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

பெங்களூரு: வடஇந்தியாவில் பருவமழை விரைவில் தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகா , கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்துள்ளது. இந்நிலையில் வட இந்தியாவிலும் தென்மேற்கு பருவமழை பெய்யும் சூழல் பிரகாசமாக ஏற்பட்டுள்ளது.

Monsoon updates: Northwest India may get rain soon

மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், ஓடிசா ஆகிய மாநிலங்களில் அதற்கான சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் விரைவில் மழை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், ஒடிசா, மேற்குவங்கம், தெற்கு குஜராத், ஜார்கண்ட், பீகார், மற்றும் மத்திய பிரதேசத்தில்
அடுத்த 2 அல்லது 3 நாட்களில் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பருவமழைக்கு முன்னதாக ஜூன் 27ஆம் தேதி முதல் இடியுடன் கூடிய பருவமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

Monsoon updates: Northwest India may get rain soon

கடந்த 24 மணி நேரத்தில் ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல், உத்தரகாண்ட், மத்திய பிரேதேசம், சத்தீஷ்கர், ஜார்கண்ட், அசாம், மேகலாயா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் இடியுடன் மழை பெய்திருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. நாட்டின் மழை சதவீகிதம் இயல்பை விட 39 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது பருவமழை இந்தியாவின் மத்திய பகுதிக்கு நகர்ந்துள்ள நிலையில் மழையின் பற்றாக்குறை அளவு 70 சதவீதமாக இருக்கும்.

வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

English summary
The Southwestern Monsoon has covered almost entire south India and is now heading northwards. The monsoon would soon be over Central India as conditions are favourable for its advance is parts of Maharashtra, Chhattisgarh and Odisha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X