கோலார் அருகே அடுத்தடுத்து வெடித்து சிதறிய 900 காஸ் சிலிண்டர்கள்.. தீ பரவியதால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடக மாநிலம் கோலார் அருகே சுமார் 900 சமையல் காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
கோலார் மாவட்டம், சிந்தாமணி நகரின் அருகே, பாகேபள்ளி சாலையில், ஹெச்.பி. நிறுவனத்திற்கு சொந்தமான காஸ் சிலிண்டர் குடோன் உள்ளது.

நேற்று இரவு இந்த குடோனிலிருந்து காஸ் சிலிண்டர்களை 2 லாரிகளில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காஸ் கசிவால், தீ மளமளவென பரவி சிலிண்டர்கள் வெடித்து சிதறின.

2 லாரிகளும் முழுக்க எரிந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தால், ஹெச்.பி. அலுவலகம் அருகே இருந்த பள்ளியொன்று சேதமடைந்தது. இரவு நேரம் என்பதால் அதிருஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு ஹெச்.பி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications