ஒடிஷாவில் வெயில் கொடுமை.. இன்று முதல் காலை 6 மணிக்கு பள்ளிகள் திறப்பு!
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: ஒடிஷாவில் கடுமையான வெயில் காரணமாக இன்று முதல் காலை 6 மணிக்கே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
ஒடிஷாவில் கோடை தொடங்கியவுடனே அனைத்து பள்ளி, கல்வி நிறுவனங்களின் நேரங்களும் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டிலும் வெயில் உச்சகட்டமாக வெளுத்து வருவதால் பள்ளிக்கூட நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ஒடிஷா மாநிலம் முழுவதும் இன்று முதல் காலை 6 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுவிடும். பின்னர் காலை 10 மணிக்கே அதாவது வெயில் கொளுத்துவதற்கு முன்பாகவே பள்ளிகள் மூடப்பட்டு விடும்.
ஒரு மாத காலம் இது நடைமுறையில் இருக்கும். கோடையின் உச்சமான மே 1-ந் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்படும்.












Click it and Unblock the Notifications