ம.பி: ராமர் கோவில் நிதி வசூல் பேரணி- மத மோதல் நிகழ்ந்த கிராமத்தில் 13 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு
போபால்: மத்திய பிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு நிதி வசூலிக்கும் பேரணியின் போது மோதல் நிகழ்ந்த சந்தன்கேடி கிராமத்தில் ஆக்கிரமிப்பு என கூறி 13 சிறுபான்மையினர் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.
மத்திய பிரதேசத்தில் வலதுசாரி அமைப்பினர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான நிதி வசூலிக்கும் பேரணியை நடத்தி வருகின்றனர். இந்த பேரணி இந்தூர் அருகே சந்தன்கேடி கிராமத்துக்குள் சென்ற போது கடந்த டிசம்பர் 29-ல் அங்கு மோதல் ஏற்பட்டது. இருதரப்பினர் இடையே துப்பாக்கிச் சூடும் நிகழ்த்தப்பட்டது.

இந்த மோதல்கள் தொடர்பாக இதுவரை 27 பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மோதல் நிகழ்ந்த சந்தன்கேடி கிராமத்தில் 13 சிறுபான்மையினர் வீடுகள் இடிக்கப்பட்டதால் பதற்றம் நிகழ்கிறது.
ஆனால் அரசு தரப்பில், சாலை பணிகளுக்காக இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இது தொடர்பாக ஏற்கனவே ஆக்கிரமிப்பாளர்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டும் இருந்தது என கூறப்படுகிறது.
மேலும் இடிக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் மத்திய பிரதேச மாநில அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்தன. தீயணைப்பு வாகனம் கூட செல்ல முடியாத நிலை அப்பகுதியில் இருந்தது. அதனால் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன என்கிறது அரசு தரப்பு.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications