போக்ஸோ சட்டத்தில் முதல் தூக்கு தண்டனை... பலாத்கார வழக்கில் 46 நாளில் ம.பி.யில் மரண தண்டனை
போக்ஸோ சட்டத்தில் முதல் முறையாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
போபால்: போக்ஸோ சட்டத்தின் புதிய விதியாக பலாத்காரம் செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்புணர்வு குற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதை தடுக்க தண்டனைகள் கடுமையாக்கினால்தான் என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம்.
அதுமட்டுமல்லாது காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு, உ.பி.யில் உன்னவ் பகுதியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கு உள்ளிட்டவற்றில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

நடவடிக்கை எடுக்கப்படும்
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும். இதற்காக போக்ஸோ சட்டத்தில் திருத்தம் கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

சட்டமாக மாறியது
கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சரவையை பிரதமர் நரேந்திர மோடி கூட்டினார். அப்போது சிறுவர்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் எனப்படும் போக்ஸோ சட்டத்தில் தண்டனையை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் படி குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வழி வகை செய்யும் மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து ஜனாபதியின் ஒப்புதலுக்கு பிறகு அந்த மசோதா கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி சட்டமாக மாறியது.

குற்றப்பத்திரிகை
இதையடுத்து மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்டத்தில் கடந்த மே 21-ஆம் தேதி பாகீரத் பாட்டீல் (40) என்பவர் 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார். இதையடுத்து அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் 12 மணி நேரத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில் 3 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

46 நாட்களில் முதல் வழக்கு
இதையடுத்து சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சுதன்சூ சாக்சேனா குற்றவாளி பாட்டீலுக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டார். போக்ஸோ சட்டத்தில் திருத்தம் மேற்கொண்ட பிறகு பலாத்கார வழக்கை 46 நாட்களில் விசாரணை நடத்தி உச்சகட்ட தண்டனை வழங்கப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications