சேற்றில்...பசு சாணத்தில் பிறந்தவள்...எனக்கு கொரோனா வராது...பெண் அமைச்சர் நம்பிக்கை!!
போபால்: சேற்றிலும், பசு மாட்டின் சாணத்திலும் பிறந்ததால் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று வராது என்று மத்தியப்பிரதேச பெண் அமைச்சர் இமர்தி தேவி தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலத்தின் பெண்கள் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் இமர்தி தேவி. இவர் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, இவருக்கு கொரோனா இருப்பதாக வெளியான செய்தி குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் இமர்தி தேவி, ''நான் சேற்றிலும், பசுமாட்டு சாணத்திலும் பிறந்தவள். ஆதலால் என்னை கொரோனா தாக்காது. மேலும் நான் மாஸ்க் அணியாமல் வெளியே செல்வதில்லை'' என்று தெரிவித்து இருந்தார்.
சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி இவர் எழுந்து சென்றுள்ளார். இதையடுத்து, அவருக்கு கொரோனா தொற்று என்று வதந்தி பரவியது. இவர் கடந்த மூன்றாம் தேதி ஜோதிராதித்ய சிந்தியாவை சந்திக்க சென்று இருக்கிறார். அப்போது செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறியுள்ளார்.
இதற்கு முன்பாக அப்பளம் சாப்பிட்டால் கொரோனா குணமாகி விடும் என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்து இருந்தார். கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அப்பளத்தில் இருப்பதாக அர்ஜூன் ராம் கூறி இருந்தார். இவரைப் போலவே அசாம் அமைச்சர் சுமன் ஹரிப்பிரியாவும் பசுமாட்டு சாணம், பசுமாட்டு மூத்திரம் இரண்டும் கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் என்று தெரிவித்து இருந்தார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications