பலாத்காரம் செய்வது சில சமயம் சரி, சில சமயம் தவறு: ம.பி. உள்துறை அமைச்சர் பாபுலால் கவ்ர்
Subscribe to Oneindia Tamil

உத்தர பிரதேசத்தில் பெண்கள், சிறுமிகள் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். ஆனால் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவோ மீடியாக்கள் தான் உத்தர பிரதேசத்தில் நடப்பதை பெரிதுபடுத்துவதாக பொறுப்பில்லாமல் பேசியுள்ளார்.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் பாபுலால் கவ்ர் கூறுகையில்,
பாலியல் பலாத்காரம் என்பது சமூக குற்றம். அது சிலசமயம் சரி, சிலசமயம் தவறு. போலீசில் புகார் கொடுத்தால் தான் பலாத்காரம் நடந்ததாக கருதப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் வேலையில் அகிலேஷும். அவரது தந்தையும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications